மினரல் வாட்டர் ப்ளான்ட்

வெள்ளி, 17 ஜூன், 2011

சர்தாரு துப்பாக்கி எடுத்தாரு

                                            ஒரு தடவை  நம்ப சர்தாரு ஆர்மி  - ல சோல்ஜர வேலை செய்றாரு . அப்போ பாகிஸ்தான் நாட்டு  ஆர்மி  கூட நம்ப  ஆளுங்க சண்டை வந்து பெரிய யுத்தம்  நடக்குது.  அப்போ அடுத்து அவனுங்க நம்ப ஏரியா வ ஆக்கிரமிச்சு யுத்தத்துல ஜெயிக்க கூடிய ஒரு நெலமை வருது .

                                             உடனே நம்ப சர்தாரு பொங்கி எழுந்து  , நான் காப்பாதிறேன் பாருடா நாட்டை ன்னு ஒரு பெரிய கொசு வலையை எடுத்து தன் உடம்பு மேல போட்டுக்கிட்டு ,  எ.கே 47  துப்பாக்கிய எடுத்துகிட்டு  வெளிய போயி பாகிஸ்தான் காரனுங்களை பார்த்து  வெறித்தனமா சுடராறு. அவனுங்க எல்லாம் தெறிச்சு ஓடி அந்த போரு ல நம்ம இந்தியா வுக்கு வெற்றி கிடைச்சுடுச்சு.  அடுத்த நாலு அவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எல்லாம் எடுத்து மெடல் கொடுத்து கௌரவிக்கிறாங்க .
                 
                                               அப்புறம் சாயந்தரமா சர்தாரு  நண்பர்கள்   எல்லாம்  கேட்குறாங்க , ஏன்டா நீ போயி சுட்டதெல்லாம் பெரிய விசியம் கிடையாது ஆனா   கொசு வலையை எடுத்து எதுக்கு உடம்பு மேல போட்டு கிட்டு போன ன்னு . அதுக்கு நம்ப சர்தாரு , ஏன்டா சின்ன கொசுவாலேயே  இந்த கொசு வலைகுள்ளே போக முடியாதே ! அப்புறம் அவ்வளவு பெரிய புல்லெட் எப்புடி அதுக்குள்ளே போகும் ன்னு கேட்கறாரு ..

                                                அப்புறம் ஒரு சில வருடங்கள் கழித்து அவர் பையன் குட்டி சர்தாரு ராணுவத்துல வேலைக்கு போயி சேர்றாரு , அப்பன் ரிடியர் ஆகி போய்ட்டார். அப்பாவும் அதே மாதிரி ஒரு சண்டை ,  குட்டி சர்தாரு நம்ப அப்பாவை போலவே ஒரு சாகசம் செஞ்சு அப்பா பெற காப்பத்தனும் நு  இவரும்
எ.கே 47  துப்பாக்கிய எடுத்துகிட்டு  வெளிய போயி பாகிஸ்தான் காரனுங்களை பார்த்து  வெறித்தனமா சுடராறு, ஆனா இவரு மேல துப்பாக்கி குண்டு பாஞ்சு இவரை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிடறாங்க .

                                                 அப்புறம் இவரு  நண்பர்கள்   எல்லாம்  கேட்குறாங்க , ஏன்டா நீ போயி சுட்டதெல்லாம் பெரிய விசியம் கிடையாது. ஆனா உங்கப்பன் னாச்சும் கொசுவலை மேல போட்டுக்கிட்டு போனான் . ஆனா நீ ஒண்ணுமே போட்டுக்கிட்டு போவிலியே. எப்பிடிடா ன்னு கேட்க்க 
                                                  அதுக்கு குட்டி சர்தாரு , சொன்னாரு போங்கடாங்க , நான் ஓடோமொஸ் போட்டுக்கிட்டு போயிருந்தேன் ன்னு

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

1 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அசத்தல் நகைச்சுவை...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக