சர்தார்ஜி ஒரு நாள் டில்லி க்கு சுத்தி பாத்துட்டு வர போனாரு . அங்க ஒரு பெரிய பில்டிங்கை பாத்துட்டு மலைச்சு போய் நின்னு பார்த்துகிட்டே , " அடேங்கப்பா ! எவ்வளவு பெரிய பில்டிங்... சரி எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிபுடலாம்-- ன்னு ஒன்னு , ரெண்டு ,ன்னு எண்ணிகிட்டு இருக்க்ருறார் . அப்பா அந்த வழியா வந்த நம்பாளு " யோவ் சர்தாரு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற ! ன்னு கேட்க ,
அதுக்கு சர்தார், பில்டிங்ல எத்தினை மாடி இருக்குன்னு எண்ணிகிட்டு இருக்கிறேன் ன்னு சொல்றாரு ! அதுக்கு நம்பாளு யோவ் இங்க மாடி எண்ணரத்துக்கு காசு கொடுக்கணும் ன்னு சொல்றாரு !
சர்தார் பயந்து போய் நம்பாளு கிட்ட எவ்வளவு ? ன்னு கேட்க அதுக்கு நம்பாளு " ஒரு மாடி என்ன நூறு ருபா ன்னு சொல்லி, " இப்போ எத்தினை மாடி என்னுன ன்னு கேட்க , அதுக்கு நான் 15 மாடி எண்ணி இருக்கிறேன் ன்னு சொன்னாரு .
சரி கொடு 1500.௦௦ ன்னு கேட்டு வாங்கிகிட்டு போறாரு நம்பாளு. நம்பாளு போனவுடன் சர்தாரு பயங்கரமா சிரிக்கறாரு , அப்போ பக்கத்துல வந்த ஒருத்தன் யோவ் ஏன் இப்புடி சிரிக்கிற? ன்னு கேட்க , அதுக்கு சர்தாரு நடந்த கதைய சொல்லி சிரிக்கிறாரு .
அதுக்கு அவன் யோவ் இதுல சிரிக்கிறத்துக்கு என்ன இருக்கு ன்னு கேட்டா சர்தாரு சொன்னாரு " . அட போய்யா , அவன் நல்லா ஏமாந்துட்டான் .நான் மொத்தம் 26 மாடி என்ணிபுட்டு அந்தாளுகிட்ட 15 மாடி ன்னு பொய் சொல்லி புட்டேன் , அதனால எனக்கு 1100 .௦௦ ருபா லாபம் ன்னு சொன்னாராம் ...
6 கருத்துகள்:
அனைத்தும் நல்ல காமெடி
நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
நல்ல நகைச்சுவையுடன் வந்திருக்கிங்க..
வாங்க.. வாங்க...
அந்த சர்தார் ஒரு செல்லாத நோட்டு வச்சி கொடுத்து என்ன ஏமாத்திட்டாரு.அவரு போன் நம்பர் தெரிஞ்சவங்க எனக்கு தெறிவிக்கலாம்.
வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க..!!
நல்ல நகைச்சுவை.வாய் விட்டுச் சிரித்தேன்
நல்ல comedy
கருத்துரையிடுக