மினரல் வாட்டர் ப்ளான்ட்

புதன், 15 ஜூன், 2011

சர்தாரு ரயில் ஓட்டுனாரு

                                            நீதி மன்றத்துக்கு ஒரு  வித்தியாசமான வழக்கு   ஒன்னு வருது. அதாவது ரயில் டிரைவரா வேலை செய்யற நம்ப சர்தாரு  மேல தான் வழக்கு . 
                                  வழக்கு என்னான்னா , ட்ரெயின் போயிகிட்டு இருக்கறப்ப தண்டவாளத்துல இருந்து    ட்ரெயின் -ஐ கீழே இறக்கி ஆயிரக்கணக்கான பயணிகளை சாவடிக்க பார்த்தாரு , இதுதான்  வழக்கோட  சாராம்சம் .  
                                  
                                  ஜட்ஜ் கேட்குறாரு , " என்னா  சர்தாரு , உன் மேல இப்படி ஒரு குற்றசாட்டு சொல்லி இருக்காங்களே அது உண்மையா ? 

                                  ",ஆமாங்கய்யா ",  - நம்ப சர்தாரு,

                                  " , ஏன் இப்புடி செஞ்ச ? உன்னைய நம்பி ஆயிரக்கணக்கான மக்கள்    ட்ரெயின் - ல     உட்காந்துகிட்டு வர்றாங்களே , நீ இப்படி செய்யாலாமா? -- இது ஜட்ஜ் ,

                                       அய்யா நான் இப்படி செய்ய கூடாது தான் , ஆனா நான் ட்ரெயின் ஓட்டிகிட்டு இருந்தப்ப ஒருத்தன் தண்டவாளத்துல நடந்து வந்துகிட்டு இருந்தான் . அவன காப்பாத்தலாம்-- ன்னு நினைச்சேன் .

                                        ஏன்யா ! நீ  அவன் ஒருத்தன காப்பாத்தரத்துக்கு இவங்க எல்லாரையும் பலி கொடுக்கனுமா , அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போக வேண்டியதுதானே - ன்னு ஜட்ஜ் கேட்டார். 
                                      
                                        அய்யா ! உங்களுக்கு வந்த இந்த யோசனை எனக்கும் வந்துச்சு , அதனால அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போலாம் ன்னு நெனச்சேன் . ஆனா பாருங்க ,.  ட்ரெயின்   பக்கத்துல வர வர அந்த நாயி , தண்டவாளத்துல இருந்து இறங்கி காட்டு பக்கம் போக ஆரம்பிச்சுட்டான் . உடுவனா நானு , அவன  தொரத்திகிட்டு ....................................

                  

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விடாதிங்க பிடிங்க... அவன் எப்படி ஓடலாம்...

பெயரில்லா சொன்னது…

நன்ராக இருக்கிரது.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக